திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும் அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.திறனொளி கலை மன்ற அதிபர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாட் அவர்களின் நெறிப்படுத்தலுடன் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகருமான இஸட்.எம்.றிஸ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக கப்சோ நிறுவன பணிப்பாளர் தேசமான்ய ஏ.ஜே.காமில் இம்டாட்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்சான், கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, சட்டத்தரணி ஏ.எச்.எம்.கிபாயதுல்லாஹ், நிஹோன் லங்கா முகாமையாளர் தேசமான்ய ஏ.ஆர்.எம்.றைஸ்தீன், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களான எம்.ஜே.எம்.சுக்ரி, ஏ.எம்.ஜெஸீம், அறிவிப்பாளர் ஏ.லரீப், உட்பட பலருமகலந்துகொண்டனர். நிகழ்வினை றிஸ்வி தொகுத்து வழங்கினார். x x x
திறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்
Reviewed by Aazath FM
on
19:44
Rating: 5
Good
ReplyDelete